Thursday, April 15, 2010

விநாயகர் விக்ரஹம்

விநாயகர் பூஜை செய்து அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நினைத்த காரியம் கை கூடும் தீய சக்திகள் நம்மை அண்டாது. தொழில் வியாபாரம் பெருகி நற்பலன்கள் ஏற்படும். நீண்டநாட்களாக திருமண தடை இருந்தால் 48 நாட்கள் விரதம் இருந்து காயத்திரி மந்திரமும், கணபதி மந்திரமும் அர்ச்சனைகளும் பூஜைகளும் செய்து வர விரைவில் திருமணம் நடைபெறும். இதே போல் குழந்தை இல்லாதவர்களும் இவ்வாறு செய்து குழந்தை பாக்கியம் கிட்டும்.



அருள்மிகு விநாயகர் 8 போற்றிகள்
1. ஓம் அகரமென நிற்பாய் போற்றி
2. ஓம் அருகு சூடிய அமலா போற்றி
3. ஓம் ஆனை முகத்தனே போற்றி
4. ஓம் உண்மையர் உள்ளொளியே போற்றி
5. ஓம் ஐந்து கரத்தனே போற்றி
6. ஓம் கற்பக விநாயகா போற்றி
7. ஓம் சங்கத்தமிழ் தருவாய் போற்றி
8. ஓம் வைத்த மாநிதியே போற்றி



காயத்திரி மந்திரம்

ஓம் ஏக தந்தாய வித்மஹே!
வக்ர துண்டாய தீ மஹி!
தன்னோ தந்து ப்ரசோதயாத்!

கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத சர்வ ஜெனம்மே
வசம் ஆன ய ஸ்வாஹா!



விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின் றேனே.

No comments:

Post a Comment